Friday, October 22, 2010

கண்களின் ஓரம்
 கண்ணீர் கசிந்தது
கைகள் இரண்டும் தேடியது
 கைக்குட்டையை  அல்ல
அவளின்
கைபேசி எண்களை....!

மின்வெட்டு

மெழுகுவர்த்திகள்
மேல் என்ன கோபம் ..?
மரண தண்டனை விதித்தார்
மின்சார அமைச்சர்  ..!
கண் இமைக்கும் நேரத்தில் காதல் வந்தது
காதல் சொல்ல மட்டும் யுகங்கள் ஆனது

மாண்டுப் போனது.....?

 இறந்து போன எறும்பை கூட
 சுமந்து போகுமாம் எறும்புக்கூட்டம்
 இங்கு பலநேரங்களில்
 மடிந்துப்போன மாந்தரை
எடுத்து போக
கார்ப்ரேஷன் எந்திரங்களே தேவைப்படுகிறது 
மாண்டுப் போன
து மனிதன் மட்டும் தானா ..?
அவள் மிகவும் கொடுமைக்காரி ,
அவளின் கைநகங்கள் கூட கொலை செய்கிறது

Monday, October 4, 2010

காதல்நட்பு

எந்த பெண்ணை பார்த்தாலும்
எட்டி பார்க்கும் மோகமுள்
பெண்ணே
உன்னை பார்க்கும்போது
மட்டும்
எங்கோ ஒளிந்து கொள்கிறது
எப்படி சொல்வேன்
உன் மீது நான் கொண்டது
காமம் தாண்டிய
காதல்நட்பு  என்று..!

காதலின் உச்சகட்டம் ...!.

உண்மையான அன்பை காட்ட
என்ன தருவாய் என்று கேட்டார்கள்
நான் என்னையே தருவேன் என்றேன்
அதை காமம் என்றார்கள்
அது காமம்
அல்ல காதலின் உச்சகட்டம் ...!.

Friday, October 1, 2010

கண்ணாமூச்சி....!

பெண்ணே..!
நிலவுக்கும் உனக்கும்
என்ன கண்ணாமூச்சி அட்டமா
உன் முகம் பார்க்கும்போதெல்லாம்
மேகத்திற்குள் ஒளிந்து கொள்கிறாள் ..!