பல நாட்களுக்கு பிறகு ...
ஜன்னலின் ஓரத்தில் நானும்
ஜன்னலுக்கு வெளிய அவளும்
ஒருவரை ஒருவர் தொடாமல் காதலிக்கிறோம்
சுடிதார் துப்பட்டா முகத்தில் ஒரசி செல்வதுப்போல்
மழையின் சாரல் காற்று முகத்தில்
வானம் பார்த்தே காத்துகிடந்த
விவசாயியின் கண்களை போல்
உன் வருகைக்காகவே காத்திருந்தேன்
வானம் பொய்க்கவில்லை
பெண்ணே நீ மட்டும் பொய்த்தது என்ன .?