Saturday, January 28, 2012

கவிஞனின் காதல்

காதலியே இல்லாமல்
 காதலிக்க கற்றுகொடுத்தது கவிதை 
அவளின்றி அவளை வர்ணிக்கிறேன்
 எப்போதும் சேர்ந்து இருந்த்ததில்லை 
ஆனால் பிரிவை பற்றி பேசுகிறேன் 
எப்போதும் கை கோர்த்து நடந்த்ததில்லை 
ஆனால் அவள் விரலின் ஸ்பரிசம் உணர்ந்திருந்தேன்
 கண்ணோடு கண் பேசியதில்லை 
கண்கள் முடி மடியில் கிடந்ததில்லை 
கொஞ்சியதுமில்லை கொஞ்சம் கோபப்பட்டதுமில்லை
 காதல் மட்டும் செய்கிறேன்
 பெயர் தெரியாமல்  காதல் உண்டு 
ஊர் தெரியாமல் காதல் உண்டு
 உருவம் தெரியாமல் காதல் உண்டு
 காதலியே தெரியாமல் காதல் உண்டா ?
கவிஞனை கேட்டுப்பாருங்கள்....