காதலியே இல்லாமல்
காதலிக்க கற்றுகொடுத்தது கவிதை
அவளின்றி அவளை வர்ணிக்கிறேன்
எப்போதும் சேர்ந்து இருந்த்ததில்லை
ஆனால் பிரிவை பற்றி பேசுகிறேன்
எப்போதும் கை கோர்த்து நடந்த்ததில்லை
ஆனால் அவள் விரலின் ஸ்பரிசம் உணர்ந்திருந்தேன்
கண்ணோடு கண் பேசியதில்லை
கண்கள் முடி மடியில் கிடந்ததில்லை
கொஞ்சியதுமில்லை கொஞ்சம் கோபப்பட்டதுமில்லை
காதல் மட்டும் செய்கிறேன்
பெயர் தெரியாமல் காதல் உண்டு
ஊர் தெரியாமல் காதல் உண்டு
உருவம் தெரியாமல் காதல் உண்டு
காதலியே தெரியாமல் காதல் உண்டா ?
கவிஞனை கேட்டுப்பாருங்கள்....